உருப்படாத தி.மு.க. விற்கான எதிர்க்கணைகள் சில!!

PM 11:11

1]பொழுதைப் போக்க இலவசத்தொலைக்காட்சி வழங்கும் கருணாநிதியால்,
ஏன் உயிரைக்காக்க இலவசத்தலைக்கவசம் வழங்க முடியவில்லை?

2]மரணதண்டனையை நீக்க கோரும் கனிமொழி, மதுரையில் சன்குழும தொழிலாளர்கள் அழகிரி ஆதரவாளர்களால் பெற்றோல்குண்டு வீசிக்கொல்லப்பட்டமைக்கு எதிராக, போர்க்கொடி உயர்த்தவில்லை?

3]தமிழ் எங்கள் மூச்சு என்று கூவும் கழகத்தின் தூண்களில் ஒருவரான
ஆற்காடு வீராசாமி, தன் பெயரின் ஆங்கிலஎழுத்துக்களில் வீராஸ்வாமி
என்று மாற்றியது ஏன்?

4]மத்திய அரசே கைவசம் உள்ளபோது, தமிழகத்திற்கு எவ்வளவோ முன்னேற்ற அடிக்கற்கள் நாட்டியிருக்கலாம். அதை விடுத்து கனிமொழிக்கு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவிகளை எடுத்தளிப்பதிலேயே குறியாக நிற்கின்ற கருணாநிதியைப் போய் யார் "நிர்வாகத்திறன் கொண்டவர்" என்று
புகழ்ந்தது?

5] தமிழ் நாட்டிலேயே தலையை பிய்த்துக்கொண்டு நடக்கின்ற மின்சாரப் பற்றாக்குறைச் சண்டைகளுக்கு மத்தியில், இலங்கைக்கு தனுஷ்கோடி-மன்னார் வழியாக மின்சாரம் வழங்குவதைப் பற்றி ஆற்காடு வீராசாமி வாயே திறக்காதது
ஏன்?

6] உலகத்தமிழர் தலைவராக கழகக் கண்மணிகள் மார்தட்டும் கருணாநிதியால்
பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் திறக்கப்பட முடியாத நிலையில் கன்னட வெறியர்களால் தடுக்கப்பட்டு வரும் வள்ளுவர் சிலையை ஏன் திறக்க முடியவில்லை?

7] பெரியார் சீடர் என்று தன்னைச்சொல்லும் கருணாநிதி எதற்காக பெண்தெய்வமாக போற்றப்படும் கண்ணகிக்கு சிலை வைத்தார்?
[சிலை வைத்தது தவறு இல்லை. பெரியார் சீடர் கடவுளுக்கு சிலை வைப்பது ஏன்?]

8] திருக்குறளை கசடறக் கற்று உரை எழுதி, "வாழும் வள்ளுவரே" என்று
தொண்டர்கள் அழைப்பதை அநுமதித்து வரும் கருணாநிதி,
திருக்குறளை வாழ்கையில் பெரும்பாலும் கடைப்பிடிக்காதது ஏன்?
[இந்த தலைப்பில் எழுதத்தொடங்கினால் ஒரு பெரும் நூலே எழுதலாம்.]

9] கவிதை என்ற பேரில் முரசொலியில் கருணாநிதி எழுதும் சொற்கலவைகளுக்கும் கவித்தரத்திற்கும் சம்பந்தம் குறைவாயுள்ளமை பற்றி,
அவருடன் கலந்து உறவாடும் வைரமுத்து,பா.விஜய் போன்றவர்கள் வாய்திறக்காமைக்கு காரணம் என்ன?

10] வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி ஆனந்தவிகடனுக்கு அளித்த பேட்டியில்
தனக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தமைக்கு காரணம் கலைஞர்தான் என்று கூறியுள்ளார். உண்மையான திறமையின் அடிப்படையில்
பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகாமல், சிபாரிசின் அடிப்படையில் மதன்கார்க்கிக்கு இடம் கிடைத்தது எவ்வாறு?

11] இவ்வாறு தன் தோழர் மகனுக்கு சிபாரிசு பண்ணி இடமளித்த கழகத்தலைவர்
கழகத்தின் அடிமட்டத்தொண்டர்களின் சந்ததிகளுக்கும் சிபாரிசு செய்து உதவலாமே? என்ற பகுத்தறிவு அப்பாவித் தொண்டர்களுக்கு வராமற் போனது ஏன்?

12] தன் உறவினருக்குமேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக்கோரி லஞ்சதடுப்புபிரிவு அதிகாரியிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பூங்கோதைக்கு
எதிராக ஆதாரங்கள் இருந்தும், வழக்கு தொடராதது ஏன்?

13] (பகுத்தறிவு இயக்கமாக வெளிக்காட்டிக்கொள்ளும்) "திராவிட முன்னேற்றக் கழகத்தின் எந்த உறுப்பினரும் சாமி கும்பிடக்கூடாது; கும்பிட்டால் கட்சியில் இருக்க கூடாது. கடவுள் பக்தி உள்ள எவரும் தி.முகவிற்கு வாக்களிக்கத் தெவையில்லை." என்று ஏன் வெளிப்படையாக கருணாநிதி தெரிவிக்கவில்லை?

14] வெறுமனே பேச்சில் கொல்லுவேன்,வெட்டுவேன் என்று கூறிய காடுவெட்டி குருவை, அதிகாலையில் கதவை உடைத்து கைது செய்த தி.மு.க.அடிமைக் காவல் அதிகாரிகள், மதுரையில் இரு தமிழர்களின் கொலைக்கு காரணமான
செயல்புயல் மு.க.அழகிரியின் வீட்டுக் கதவை ஏன் தடவக்கூட முடியவில்லை?

15] விடிதலைப்புலிகளின் தூண்களில் ஒருவரான சு.ப.தமிழ்ச்செல்வன் மரணத்திற்காக கவிதை எழுதிய கருணாநிதி, தமிழ்ச்செல்வனின் படுகொலையை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோரை,
தம் பெயர்ப் பட்டியை கழற்றிவைத்துவிட்டு வந்த காவற்துறையினரைக்கொண்டு
அடித்துக் கலைப்பித்தது ஏன்?

3 comments:

பெயரில்லா சொன்னது…

மூத்த பதிவர், வருங்கால டாகடர், உடன் பிறப்பு அண்ணன் லக்கிலுக் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!

நல்லதந்தி சொன்னது…

அய்யோ பாவம்!

ஒரு எலுமிச்சை பழம் எடுத்துக்கொள்ளவும்..பிறகு அதை இரண்டு துண்டாக நறுக்கி,ஒருதுண்டை முதலில் தலையில் தேய்த்துக் கொள்ளவும்.பினாத்தல் அடங்காவிட்டால் இரண்டாவது துண்டையும் உபயோகிக்கவும்.அப்போதும் அடங்காவிட்டால் 'நெஞ்சுக்கு நீதி' ஏதோ ஒரு பாகத்தை எடுத்துப் படிக்கவும்.

பி.கு.:எனக்கும் இப்படித்தான் இருந்தது பிறகு இதையெல்லாம் செய்த பிறகு இப்போது தேவலை! :)))))))))

நவநீதன் சொன்னது…

"அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா...." என்று கவுண்டமணி டயலாக்கை சொல்லி மக்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் ....
கருணாநிதி ஒரு அரசியல் சாணக்கியன் என்பதை எல்லோருக்கும் புரிய வைத்த பதிவு... நல்ல முயற்சி.

கருத்துரையிடுக