விழித்தெழுக என் தேசம்! - இரவீந்திரநாத் தாகூர்

PM 3:00

இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாச மின்றிஅறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரணவிடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டுத்துண்டுகளாய்ப்போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கேமெய்நெறிகளின்அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கிதனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும்தெளிந்தஅறிவோட்டம்
எங்கேபாழடைந்த பழக்கம் என்னும்பாலை மணலில்
வழி தவறிப்போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும்
இதயத்தை எங்கேவழிநடத்திச் செல்கிறாயோ,
அந்தவிடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழுகஎன் தேசம்!